சர்ச்சை படத்தில் நடிக்கும் பிரபல நடிகை..!! அதிர்ச்சி அப்டேட்ஸ்..!!


சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவை சேர்ந்த உஸ்மா அகமது என்ற பெண், மலேசியாவில் பணியாற்றிய போது பாகிஸ்தானியர் ஒருவரால் ஈர்க்கப்பட்டு, பாகிஸ்தான் அழைத்து செல்லப்பட்டு, அங்கு துப்பாக்கி முனையில் கட்டாய திருமணத்திற்கும், சித்ரவதைக்கும் உள்ளாக்கப்பட்டார்.

பின்னர் அங்குள்ள இந்திய தூதரகம் மூலமாக பத்திரமாக இந்தியா திரும்பியவர், பாகிஸ்தான் ஒரு மரணக்கிணறு, அந்நாட்டிற்கு செல்வது சுலபம், ஆனால் வெளியில் வர முடியாது. இந்தியா போன்ற ஒரு சுதந்திரமான பாதுகாப்பான நாடு இல்லை என்று கூறினார். இவரின் வாழ்க்கையை பாலிவுட்டில் சினிமாவாக எடுக்க உள்ளனர்.

சிவம் நாயர் இப்படத்தை இயக்க உள்ளார். இதில் உஸ்மா அகமதாக, இலியானா நடிக்க உள்ளார். இதுகுறித்து சிவர் நாயர் கூறுகையில், என்னுடைய படத்தில் இலியானாவை நடிக்க வைக்க விரும்புகிறேன். இதுதொடர்பாக அவரிடம் பேசினேன், அவருக்கும் பிடித்திருக்கிறது. உஸ்மாவையும் சந்தித்து பேசியுள்ளோம். தற்போது திரைக்கதை அமைக்கும் பணி நடக்கிறது. உஸ்மா ரோலுக்கு இலியானா தான் மிக பொருத்தமாக இருப்பார் என்று கூறினார். இந்த படத்தால் சர்ச்சை வெடிக்கும் என தெரிந்தே ஒப்புக்கொண்ட இலியானாவை பார்த்து வியக்கிறார்கள் பாலிவுட் திரையுலகினர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#