அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் அஜித் ஒரு போதும் பேட்டி கொடுப்பதையே விரும்பியது இல்லை, அவரை தொலைக்காட்சி பேட்டிகளில் பார்ப்பது மிக அரிது.
அதற்கு காரணம் கோபிநாத் அஜித்தை ஒரு பேட்டி எடுக்கும் போது அவருக்கு தெரிய வந்ததாம்.
அஜித் இதுக்குறித்து கோபிநாத்திடம் கூறுகையில் ‘சார் நான் ஆரம்பத்தில் தமிழை தவறாக பேசினேன், அப்போது ஒரு மாதிரி பேசினார்கள்.
சரி ஆங்கிலத்தில் பேசினேன், ஒரு தமிழ் நடிகன் ஆங்கிலத்தில் பேசுவதா? என்று அதற்கும் திட்டினார்கள்.
இனி பேசவே வேண்டாம் என்றேன், அஜித் என்ன அவ்வளவு பெரிய ஆளா, பேசமாட்டாரா? என்று கூறினார்கள், என்ன செய்வது என்றே தெரியாமல் தான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன்’ என்று கூறினாராம்.
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.