பிக்பாஸ் ஜுலியை தொகுப்பாளினியாக ஆக்கியது ஏன்- கலா மாஸ்டர் சொன்ன காரணம்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டத்தில் தனி ஒரு பெண்ணாக தெரிந்தவர் தான் ஜுலி.

இதனால் அவரை தமிழச்சி என்று கூட பலரும் கூறினர். அதுமட்டுமின்றி ஜல்லிக்கட்டு போராட்டத்திற்காக முழக்கமிட்ட வசனங்கள் எல்லாம் புகைப்படங்களாகவோ, வீடியோவாக சமூகவலைத்தளங்களில் வைரலாகின.

இப்படி ஜுலியை தூக்கி வைத்து கொண்டாடி மக்கள், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரின் செயலைக் கண்டு அவர் மீது மிகவும் ஆத்திரப்பட்டனர்.

அவரை கேட்காத மோசமான கேள்விகள் இல்லை என்று கூறலாம். இப்போது வரை கூட அவரை பலரும் மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டி வருகின்றனர்.

இப்படி யார் என்ன சொன்னாலும், ஜுலி தன்னுடைய வேலையை சரியாக செய்து வருகிறார். அவருக்கு தொகுப்பாளினியாக வாய்ப்பையும் கலா மாஸ்டர் வாங்கிக் கொடுத்தார்.

இதனால் அவரிடம் ஏன் ஜுலியை தொகுப்பாளினியாக மாற்றினீர்கள் என்று கேட்ட போது, அவரைப் பற்றி பலரும் விமர்சித்துக் கொண்டே இருந்தனர். ஒரு கல்லூரிக்கு சென்று விட்டு திரும்புகிறேன், சமூகவலைத்தளங்களில் அவரை மிகவும் மோசமாக கூறியிருந்தனர்.

இப்படி பல விமர்சனங்களை சந்திக்கும் அவளிற்கு நான் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக அந்த வாய்ப்பு கொடுத்தேன், யார் என்ன பேசினாலும் கவலையில்லை என்ற முடிவிலே அவரை எடுத்தேன் என்று கூறியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.