திருமணமாகி 4 மாதம் கூட ஆகவில்லை…அதற்குள் கணவரை விவாகரத்து செய்கிறாரா பிரியங்கா சோப்ரா

திருமணமான 117 நாட்களுக்குப் பிறகு பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும்ம், பாப் பாடகர் நிக் ஜோனாஜூம் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டு வந்த தமிழன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இப்படத்தைத் தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து, பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார். ஹாலிவுட் படங்களிலும், தொடர்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தன்னை விட 10 வயது குறைவான அமெரிக்க பாப் பாடகரும், நடிகருமான நிக் ஜோனாஸை காதலித்து கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் தேதி திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து 117 நாட்களுக்குப் பிறகு இருவரும் விவாகரத்து நோக்கி செல்ல இருப்பதாக ஓகே பத்திரிக்கை (OK! Magazine) ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஓகே பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இருவருக்கும் எந்த விஷயத்திலும் ஒத்துப்போகவில்லை. இருவருக்கும் எல்லா விஷயத்திலும் சண்டை வந்துள்ளது. வேலை, பார்ட்டிக்கு செல்வது, ஒன்றாக நேரம் செலவிடுவது உள்பட பலவற்றில், இருவருக்கும் அடிக்கடி சண்டை என்று அந்த பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

https://twitter.com/Kalimahtoyibah3/status/1111595211661041665

மேலும், பிரியங்காவை தனது கட்டுப்பாட்டில் இருக்கும்படி கூறுவதாகவும், அடிக்கடி பிரியங்கா கோப்படுவதாகவும், அதனால், நிக் ஜோனாஸ்க்கு தற்போது வரை புரிந்து கொள்ள முடியவில்லை என்றும், பிரியங்கா சோப்ரா உடனான இந்த திருமண உறவை முடித்துக் கொள்ள நிக் ஜோனாஸின் குடும்பத்தினர் கருதுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

https://twitter.com/WORLDMUSICAWARD/status/1110743403057369088

மேலும், பிரியங்கா சோப்ரா குழந்தை பெற்றுக்கொண்டு திருமண வாழ்க்கையில், தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என்று நிக் ஜோனாஸின் குடும்பத்தினர் கருதுகின்றனர். ஆனால், பிரியங்காவோ தொடர்ந்து 21 வயது பெண்மணி போன்று நடித்துக் கொண்டிருக்கிறார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://twitter.com/Kalimahtoyibah3/status/1110375234270457856

இதன் காரணமாக இருவரும் விவாகரத்து நோக்கி சென்றுள்ளனர் என்று அந்த ஓகே பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.

ஆனால், இந்த விவாகரத்து கதையில் உண்மையில்லை. அது வெறும் வதந்தி மட்டும் தான் என்றும், தற்போது பிரியங்காவும், நிக் ஜோனாஸூம் மியாமியில் குடும்பத்துடன் விடுமுறையை உற்சாகமாக கழித்து வருவதாகவும் பிரியங்கா தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/Kalimahtoyibah3/status/1110297479210139648