ஊருக்கே கறி விருந்தில் சோறு போட்ட சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் செந்தில் கணேஷ்! எதற்காக பாருங்கள்

தனியார் தொலைக்காட்சி ஒன்றின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி ஜோடி. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும் ஒரு வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்தில் தனது மகளின் 2 வயது பிறந்தநாளிற்காக தனது ஊருக்கே கறி சோறுடன் விருந்து வைத்து அமர்களப்படுத்தியுள்ளார், செந்தில் கணேஷ். மேலும் இதனை தனது பேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி ஜோடி அடுத்ததாக சூர்யாவின் 38வது படமாக சுதா கோங்கராவின் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.