இந்த ஒரு விஷயத்தையாவது ஆர்யா எங்களுக்கு செய்திருக்கலாம்: எங்க வீட்டு மாப்பிள்ளை சீதாலட்சுமி வருத்தம்

நடிகர் ஆர்யாவிற்கு பெண் தேடுவதற்காக நடத்தப்பட்ட டிவி நிகழ்ச்சி எங்க வீடு மாப்பிள்ளை. அதில் பல பெண்கள் கலந்துகொண்டனர். அதில் பங்கேற்ற அபர்ணதி தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். மற்ற பெண்கள் சிலரும் மாடலிங்கில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அதில் ஒருவரான சீதாலட்சுமி ஆர்யா திருமணம் பற்றி உருக்கமாக பேசியுள்ளார். அவருக்கு சயிஷாவுடன் திருமணம் என்று சமூக வலைத்தளங்களில் பார்த்து தான் தெரிந்துகொண்டோம். அவர் எங்களுக்கு மட்டுமாவது நேரடியாக சொல்லியிருக்கலாம். அவருடன் பெர்சனாலாகவும் ப்ரொபெஷ்னலாகவும் நெருக்கமாகதான் இருக்கிறோம். அவர் எங்களுக்கு கூட சொல்லாமல் போனது வருத்தம் அளித்தது என சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.