அண்ணானு கதறது உங்க காதுல கேட்கலையாடா? கண்ணீருடன் பிரபல சீரியல் நடிகை வெளியிட்ட வீடியோ.!

பொள்ளாச்சியில் நான்கு பேர் கொண்ட கும்பல் மறைமுகமாக அரசியல் கட்சியின் ஆதரவுடன் கிட்டத்தட்ட 250 பெண்களுக்கும் மேலான பெண்களை சீரழித்த சம்பவம் பலரையும் கோபத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ ஒன்றில் அண்ணா என்னை விட்டுடுங்க என ஒரு பெண் கதற கதற அவரை 4 இளைஞர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்திய வீடியோ ஒவ்வொருவரையும் கொலை நடுங்க வைத்துள்ளது.

ஈவு இரக்கமே இல்லாத இந்த மிருங்கங்களை உடனடியாக தண்டிக்க வேண்டும். தண்டனை கொடூரமானதாக இருக்க வேண்டும் என மக்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சீரியல் நடிகையான நிலானி கண்ணீருடன் கதறி கதறி அழுது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Gepostet von Nilani Nilani Nila am Dienstag, 12. März 2019