மீண்டும் அம்மாவாகும் சமீரா ரெட்டி – நிறைமாத கர்ப்பிணியாக அவரே வெளியிட்ட புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் படத்தில் இணைந்து நடித்து பிரபலமானவர் சமீரா ரெட்டி. அதன் பின்னர் வெடி, அசல், வேட்டை உள்ளிட்ட படங்களிலும் நடித்து பிரபலாமானார்.

பிஸியான நடிகையாக வலம் வந்த போதே கடந்த 2014 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவை சேர்ந்த அக்ஷய் வர்தே என்ற தொழிலதிபரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தான்.

இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு சமீரா ரெட்டி தற்போது மீண்டும் கற்பமாகியுள்ளார். இதனை உறுதி செய்யும் விதமாக அவரே தன்னுடைய இன்ஸ்டாவில் கர்ப்பவதியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/BtxqvlgHVL5/