சென்னை: பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனுக்காக மட்டும் முத்தக் கொள்கையை தளர்த்த தயார் என்று தமன்னா தெரிவித்துள்ளார்.
படங்களில் முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்ற கொள்கையை வைத்துள்ளார் தமன்னா. புதுப்பட வாய்ப்புகள் வரும்போது முத்தக் காட்சியில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டு தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்.
இந்நிலையில் அவர் தனது மனதை மாற்றிக் கொண்டுள்ளார்.
நான் அண்மையில் ரித்திக் ரோஷனை சந்தித்தேன். அவரை பார்த்ததும் ஹாய், நான் உங்களின் தீவிர ரசிகை, உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று தெரிவித்தேன். அவர் ஓகே என்றார் என தமனன்னா தெரிவித்துள்ளார்.
ரித்திக் ரோஷனை பார்த்த மகிழ்ச்சியில் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. என்னுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க வேண்டுமா என்று அவர் கேட்க, உடனே ஆமாம் என்று கூறினேன் என்கிறார் தமன்னா.
நான் படங்களில் முத்தக் காட்சியில் நடிப்பது இல்லை. ஆனால் ரித்திக் ரோஷனாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன் என்று தோழிகளிடம் ஜோக்கடிப்பேன். அவருடன் மட்டும் முத்தக் காட்சியில் நடிப்பேன் என்று தமன்னா தெரிவித்துள்ளார். அது என்ன தமன்னா ஓரவஞ்சம் என்று பலரும் ஏற்கனவே கேட்கத் துவங்கிவிட்டனர்.
சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக தமன்னா நடித்த கண்ணே கலைமானே படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் தமன்னாவை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.