என் மனதை காயப்படுத்துகிறார்கள்..!! கதறி அழுத பிரபல நடிகை..!!


சுப்ரமணியுபுரம், கனிமொழி, வடகறி, யட்சன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருப்பவர் சுவாதி. இவருடன் அறிமுகமான நடிகைகள் கிளாமருக்கு தாவி மார்க்கெட்டை உயர்த்திக்கொண்ட நிலையில் கிளாமராக நடிப்பதா? குடும்பப்பாங்கான கதாபாத்திரங்கள் மட்டுமே போதுமா? என்ற குழப்பத்தில் தள்ளாடிக்கொண்டிருக்கிறார் சுவாதி. இந்த குழப்பத்துடன் நடிகருடன் இணைத்து பேசும் விவகாரங்களும் அவரை மேலும் கவலையில் ஆழ்த்தி இருக்கிறது. இதுபற்றி அவர் கண்ணீர் விடாத குறையாக கூறினார்.

சுவாதி கூறும்போது,’உடன் நடிக்கும் ஹீரோக்களுடன் என்னை இணைத்து பேசுவதை நீண்ட நாட்களாக செய்து வருகின்றனர். நடிகர்கள் ஜெய், கிருஷ்ணா போன்றவர்களுடன் காதல் என்று என்னை இணைத்து பேசியவர்கள் தெலுங்கு நடிகர்கள் அல்லாரி நரேஷ், நிகில் போன்றவர்களுடனும் இணைத்து பேசுகின்றனர். உண்மை துளியும் இல்லாத இதுபோன்ற தகவல்கள் என் மனதை பெரிதும் பாதித்திருக்கிறது.


ஒரு பெண்ணின் வாழ்க்கை மதிப்பு என்ன என்பதை மக்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. எனது குடும்பத்தினரும், நண்பர்களும் இதுபோன்ற ஆதாரமற்ற கிசுகிசுக்களால் மனதளவில் பாதித்திருக்கின்றனர். சினிமாவில் இது சகஜம் என்று நான் கண்டுகொள்ளாமல் இருந்தாலும் என் குடும்பத்தினர் இன்னமும் மன பாதிப்பில்தான் இருக்கின்றனர்’ என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#