மணிரத்தினம் இயக்கத்தில் முதல் முறையாக இணையும் பிரபல நடிகர்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மணிரத்தினம். மல்டி ஸ்டார் படங்களை இயக்குவதில் வல்லவரான இவர் செக்க சிவந்த வானம் படத்தை தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்குவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார்.

மல்டி ஸ்டார் படமாக உருவாக உள்ள இந்த படத்தில் விஜய், விக்ரம், சிம்பு உள்ளிட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடந்து வந்ததாக ஏற்கனவே தகவல்கள் கிடைத்து இருந்தன.

தற்போது இந்த லிஸ்டில் மேலும் ஒரு நடிகராக ஜெயம் ரவி இணைந்திருப்பதாக புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

ஒரு வேலை இந்த தகவல் உண்மையாக இருந்தால் மணிரத்தினம் இயக்கத்தில் ஜெயம் நடிக்க இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.