விபத்தில் சிக்கியும் ராஜபீமா படக்குழுவை நெகிழ வைத்த ஆரவ்.!

பிக்பாஸ் முதல் சீசன் நாயகனான நடிகர் ஆரவ் தற்போது ராஜா பீமா படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் நரேஷ் இயக்குகிறார் சுரிபி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது,

ராஜா பீமா படம் காட்டுக்குள் எடுக்கப்பட்டு வரும் படம் என்பதால் யானை பிரதானமான வேடத்தில் நடித்து வருகிறது. கடந்த 7 நாட்களாக கஞ்சன்புரியின் அடர்ந்த காடுகளில் காட்சிகளை படமாக்கி வருகின்றனர். ஒரு காட்சியில் எதிர்பாராத விதமாக ஆரவ் யானை மீதிருந்து கீழே விழுந்தார். இதனால் படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக படக்குழுவினர் மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்தனர். ஆனால், முதலுதவி பெறுவதற்கு முன்பே எழுந்து நின்ற ஆரவ், படப்பிடிப்பில் கலந்து கொண்டார்,


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.