துள்ளாத மனமும் துள்ளும் படத்திற்கு முதலில் வைக்கப்பட இருந்த பெயர் இதுதானா?

விஜய் நடித்த முந்தைய படங்களில் ரசிகர்களால் மறக்க முடியாதது துள்ளாத மனமும் துள்ளும். எளிமையான நடிப்பு, பாடல்கள், விஜய்-சிம்ரன் ஜோடி என அதிகம் படம் பேசப்பட்டது.

கேரளாவில் இந்த படம் விஜய்க்கு ஒரு மார்க்கெட் கிடைக்க உதவியது என்றே கூறலாம். படம் ரிலீஸ் ஆகி 20 வருடங்கள் ஆன நிலையில் படம் குறித்து சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளார் இயக்குனர் எழில்.

முதலில் படத்திற்கு ருக்மணிக்காக என்று தான் எழில் பெயர் வைத்தாராம். பின் அப்பெயர் பார்த்தால் பசி தீரும் என்பது போல் வேண்டும் என தயாரிப்பாளர் கேட்ட துள்ளாத மனமும் துள்ளும் என பெயர் வைத்தார்கள்.

அதோடு இதில் முதலில் நாயகியாக நடிக்க இருந்தது ரம்பா தானாம், கதையில் மாற்றம் வர அவருக்கு பதில் சிம்ரன் கமிட்டானாராம்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.