இந்த நடிகரை இயக்க ஆசை: மேடையிலேயே கூறிய சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்திகேயன் தமிழ் சினிமாவில் அதிவேகமாக வளர்ந்துவரும் நடிகர். அவர் தற்போது இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் இன்று நடந்த ஒரு விருது விழாவில் பங்கேற்றுள்ளார். அதில் நடிகர் விக்ரமும் பங்கேற்றார். இருவரும் சேர்ந்து நிகழ்ச்சியை சிறிது நேரம் தொகுப்பாளர்களாக மாறி தொகுத்து வழங்கினர்.

மேடையில் பேசும்போது சிவகார்த்திகேயன் ஒருநாள் இயக்குனராக மாறுவர் என விக்ரம் கூறினார். அதற்கு அவர் சீயானை வைத்து படம் இயக்க ஆசை உள்ளது அப்படி இயக்கினால் அது டபுள் ஆக்ஷன் அல்லது மூன்று ரோல் கொண்ட படமாகத்தான் இருக்கும் என கூறியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.