சம்பளம் தராத தயாரிப்பாளரை அவமானப்படுத்திய இளம் இயக்குனர்..!!!


கோலிவுட்டில் ஒரு இயக்குநர் தனது சம்பளம் வராததால் ஷூட்டிங்கை நிறுத்துவது புதிய செய்தி அல்ல.

ஆனால் தனது இரண்டாவது படத்திலேயே ஒரு இளம் இயக்குநர் அப்ப்டி செய்திருப்பது தான் பரபரப்பாகியுள்ளது. இதய நடிகரின் வாரிசை வைத்து ஆயுத பெயரில் படம் எடுத்தவர் அவர்.

முதல் படம் சுமாராக சென்றது. இரண்டாவது படத்தில் றெக்க கட்டிய தயாரிப்பாளர் தயாரிப்பில் இளம் இசையமைப்பாளரை இயக்கிக்கொண்டிருந்தார்.

விநாயகனின் மறுபெயர் கொண்ட அந்தப் படத்தில் நடிகர் இளம் பொறியாளராக நடிக்கிறார்.

இந்த படத்தின் கடைசி ஷெட்யூல் கடந்த வாரம் திட்டமிடப்பட்டது. ஸ்பாட்டுக்கு வந்த இயக்குநர் தனக்கு மீதம் தர வேண்டிய சம்பளத்தை செட்டில் செய்தால்தான் படத்தை தொடர்வேன் என்று சொன்னதோடு பேக்கப் சொல்லிவிட்டாராம். இரண்டாவது படத்திலேயே ஒரு இயக்குநர் இப்படி அதிரடி காட்டியிருப்பதுதான் படவுலகில் பரபரப்பாகி இருக்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#