ரசிகர்களுக்கு திடீர் ‘ஷாக்’ கொடுத்த நடிகை ஓவியா!

ஓவியா நடித்துள்ள 90 எம்.எல்., படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதைதொடர்ந்து காஞ்சனா-3, களவாணி – 2, ஆரவ்வின் ராஜ பீமா உள்ளிட்ட படத்தில் ஓவியா நடிக்கிறார்.
சென்னை: நடிகை ஓவியா தனது ரசிகர்களுக்கு டுவிட்டர் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

‘களவாணி’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. இதைதொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார்.

ஆரவ் உடன் காதல்…..
அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆரவ் உடன் காதல் கொண்டார். ஆனால் ஆரவ் மறுத்துவிட்டார். இதையடுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பின் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

அதன்பிறகு பல்வேறு இடங்களில் ஆரவ், ஓவியா ஜோடியாக எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தன. இந்நிலையில் இருவரும் மீண்டும் காதலித்து வருவதாகவும், திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழ்கிறார்கள் என்றும் தகவல் பரவியது. ஆனால் இந்த தகவலை நடிகை ஓவியா மறுத்தார்.

திடீர் தகவல்:
இந்நிலையில் தற்போது ஓவியா நடித்துள்ள 90 எம்.எல்., படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதைதொடர்ந்து காஞ்சனா-3, களவாணி – 2, ஆரவ்வின் ராஜ பீமா உள்ளிட்ட படத்தில் ஓவியா நடிக்கிறார்.

இந்நிலையில் தனது ரசிகர்களுக்கு ஓவியா நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘இன்னும் என் மீது அன்பும் , நம்பிக்கையும் கொண்டுள்ள அனைவருக்கும் நன்றி. உங்களின் அன்பு தான் என்னை வலிமைப்படுத்தி, முன்னோக்கி கொண்டு செல்கிறது.’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.’


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.