நடிகர்கள் செய்ய தயங்கும் விசயத்தை தைரிமாக செய்த ரவுடி பேபி

நடிகை சாய்பல்லவி பிரேமம் படத்தின் மலர் டீச்சராக அனைத்து ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்து விட்டார். தமிழ் படங்களில் நடித்து வரும் அவர் தெலுங்கில் நடித்துவருகிறார்.

அண்மையில் அவர் தனுஷுடன் ஜோடியாக நடித்த மாரி 2 படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இதில் குறிப்பாக ரவுடி பேசி பாடல் ரசிகர்களை நெருப்பாக பற்றிக்கொண்டது. அவரின் நடனத்திற்கு நிறைய வாழ்த்துக்கள் குவிந்தது.

மேலும் தெலுங்கில் அவர் ஷ்ரவானந்துக்கு ஜோடியாக நடித்த Padi padi Leche Manasu படம் கடந்த மாதம் வெளியானது. இப்படம் ரூ 22 கோடிக்கு வியாபாரமானது.

ஆனால் படம் ரூ 8 கோடி மட்டும் தான் வசூல் செய்ததாம். படப்பிடிப்பின் போது அவருக்கு சம்பளத்தில் முன் தொகையை வாங்கியுள்ளார். படம் வந்த பிறகு தயாரிப்பாளர் மீதம் ரூ 40 லட்சத்தை கொடுக்க முன்வந்த போது சாய்பல்லவி வேண்டாம் என கூறிவிட்டாராம்.

நஷ்டத்தில் நானும் பொறுப்பெடுத்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார். ஆனால் சாய்பல்லவியின் பெற்றோரிடம் பணத்தை கொடுத்த முன்வந்த போதும் அவர்களும் வேண்டாம் என கூறிவிட்டார்கள்.

நடிகர்களே செய்ய தயங்கும் இப்படியான விசயத்தை நடிகையாக சாய்பல்லவி செய்ததை பலரும் பாராட்டியுள்ளார்கள்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.