குழந்தை பெற்றுக்கொள்வேன், பிறகு தான் திருமணம் – அதிர்ச்சி அளித்த பிரபல தமிழ் நடிகை!

சினிமா நடிகைகள் சிலர் லிவ் இன் ரிலேஷன்ஷிப் பற்றி எப்போதும் வெளிப்படையாக பேசமாட்டார்கள். ஆனால் இந்த நடிகை ஒருபடி மேலே சென்று தான் குழந்தை பெற்ற பிறகுதான் திருமணம் என கூறி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.

ஆந்திராவை சேர்ந்த பிரபல நடிகை ரேஷ்மி கவுதம். அவர் தமிழில் சாந்தனு நடித்த ‘கண்டேன்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அவர் தற்போது Jabardasth என்கிற டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

அவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ள நிலையில் சமீபத்தில் அவர் ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார்.

சுதீர் என்பவரை ரேஷ்மி காதலித்து வரும் நிலையில் ரசிகர் ஒருவர் திருமணம் எப்போது என கேட்டார். அதற்கு பதில் அளித்த அவர் “முதலில் குழந்தை பெற்றுக்கொண்டு பிறகு தான் திருமணம் செய்துகொள்வேன். அதனால் இன்னும் தாமதமாகும்” என கூறியுள்ளார்.

இந்த பதில் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.