விக்னேஷ் சிவன் ரசிகர்கள் அனைவராலும் அன்பான இயக்குனர் என்று அழைக்கப்படுபவர். இவர் இயக்கத்தில் இந்த வருடம் தானா சேர்ந்த கூட்டம் படம் திரைக்கு வந்தது.
இவர் அடுத்து சிவகார்த்திகேயனை இயக்கவுள்ளார், இந்நிலையில் இன்று ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் செம்ம வைரலானது.
இதில் ஒரு டெலிவரி பாய் கஷ்டமருக்காக கொண்டு சென்ற உணவை அவரே எடுத்து சாப்பிட்டார். அப்போது யாரோ வீடியோ எடுத்து அதை வெளியிட்டனர்.
இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கவே, அந்த குறிப்பிட்ட டெலிவரி மேனை நிரந்தர பணி நீக்கம் செய்து விட்டோம் என்று வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டது Zomato நிறுவனம். இது குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ’பொறுப்பை மறக்கடித்த பசிக்கொடுமை, அவரை மன்னித்து விடுங்கள்’ என்று கூறியுள்ளார். இவர் இப்படி கூறியது பலரிடமும் பாராட்டை பெற்று வருகின்றது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!