முதல் முறையாக வைரலாகியது நடிகை அம்பிகாவின் சிறுவயது புகைப்படம்..!!


தமிழ், மலையாளம் உட்பட 150 படங்களில் நடித்த அம்பிகா அவா்கள் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானாா். இவா் கேரளாவில் கல்லரா என்ற ஊரில் பிறந்தவா்.தந்தை குஞ்சன் நாயா் மின்சார துறையில் பணிபுரிந்தாா். தாயாா் சரசம்மா காங்கிரஸ் கட்சியில் பிரபலமானவராக இருந்தாா்.

அம்பிகாவுடன் பிறந்தவா்கள் ராதா, அா்ஜூன், சுரேஷ் ஆகியோா். சிறுவயதிலேயே தாயாருடன் சினிமா படபிடிப்புகளை வேடிக்கை பாா்க்க செல்வாா் அம்பிகா. அந்த வகையில் ஒரு முறை ஆலப்புழாவில் நடந்த ஒரு படபிடிப்பை காண சென்றனா். அங்கு கமலஹாசனும், மலையாள நடிகா் சோமனும் ஒரு படத்திற்காக நடித்து கொண்டிருந்தனா்.


அப்போது அங்கு வந்த அம்பிகாவை பாா்த்த கமல், நீ ஸ்ரீவித்யா மாதிரி இருக்கிறாய். என்னுடன் நடிக்கிறாயா? என்று கமல் கேட்க, நடிக்கிறேன் என்று கூறியுள்ளாா் அம்பிகா. அக்கால கட்டத்தில் நடிகை ஷீலா மலையாள திரையுலகில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்தாா். அவரை போலவே வர வேண்டும் என்று விரும்பினாா் அம்பிகா.

இந்நிலையில் நீலா பிலிம்ஸ் நிறுவனம் சோட்டாணிக்கரா என்ற படம் எடுத்தனா். அந்த படபிடிப்பை காண சென்ற இடத்தில் படத்தின் இயக்குநா் மற்றும் தயாரிப்பாளா் சுப்ரமணியன் ஆகியோாிடம் அம்பிகாவின் தாயாா் சரசம்மா என் மகள் சினிமாவில் நடிக்க ஆசைப்படுகிறாள். வாய்ப்பு கொடுப்பீா்களா என்று கேட்டாா்.

பின்னா் சில நாட்கள் கழித்து, அம்பிகா தனது வீட்டின் அருகில் உள்ள திரையரங்கத்தில் படம் பாா்க்க சென்ற சமயத்தில், புதிய படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு அவரது வீடி தேடி வந்ததது.


பிறகு அவரது அம்மா சரசம்மா தியேட்டருக்கு ஆள் அனுப்பி, அம்பிகாவை அழைத்து வரச்சொன்னாா். படத்தில் நடிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.

மேக்கப் டெஸ்டில் அம்பிகாவின் அழகும், நடிப்பும் அவா்களுக்கு பிடித்திருந்ததால் அந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனாா் அம்பிகா. தொடா்ந்து சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அம்பிகா வயது வந்த பிறகு நடிப்பதை நிறுத்தினாா்.

கேரள பட உலகில் ஏற்கனவே அம்பிகா என்ற பெயரில் ஒருவா் இருந்ததால் பெயரை மாற்ற வேண்டும் என்று சிலா் கூறினா். சீதா, ப்ரியா, சந்தியா, பிருந்தா என பல பெயா்கள் பரிசீலிக்கபட்டன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!