ஜயோ.. ஆள விடுங்கடா சாமி… நடிகையைப் பார்த்தாலே தெறித்து ஓடும் படக்குழு..!!


வாரிசு நடிகை படத்தில் வருவது போல் தான் நிஜத்திலும் லொட லொடா பேச்சாம். இதனால் படப்பிடிப்பு தளத்தில் அவரைப் பார்த்தால், அனைவரும் பயந்து ஓடுகின்றனராம்.

நாயகியாகத் தான் நடிப்பேன் என அடம் பிடிக்காமல், கிடைத்த வாய்ப்பை கச்சிதமாகப் பயன் படுத்தி வருகிறார் வாரிசு நடிகை. அப்பா பாணியில் பின்னாளில் மீண்டும் நாயகியாக ஒரு ரவுண்டு வரலாம் என மனக்கணக்குப் போடுகிறாரா எனத் தெரியவில்லை.

முன்பிற்கு தற்போது நடிப்பில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. மிரட்டலான நடிப்பால் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, கேமராவிற்கு வெளியே நடிகை கலகலப்பானவர்.படப்பிடிப்பு தளத்திலும் சக நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என எல்லோருடனும் சகஜமாக பழகக் கூடியவர்.


ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல, நடிகையின் கலகலப்பான பேச்சே சமயங்களில் மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி விடுகிறதாம். எப்போது பார்த்தாலும் எதையாவது பேசிக் கொண்டே இருப்பதால் மற்றவர்களுக்கு காதில் ரத்தம் வராத குறையாம். இதனால் நடிகையைப் பார்த்தாலே காதை பொத்திக் கொண்டு ஓடத் தயாராகி விடுகிறார்களாம் சிலர்.

ஆனாலும், நடிகை இதையெல்லாம் கண்டுகொள்வதேயில்லை. எப்போதும் போல் ஜாலியாகத் தான் எல்லோருடனும் சிரித்துப் பேசுகிறாராம். சமயத்தில், ‘இந்தப் பொண்ணு எப்.எம். ரேடியோவை முழுங்கிடுச்சோ’ என மற்றவர்கள் பயப்படும் அளவிற்கு நான் ஸ்டாப்பாக பேசுகிறாராம்.

அதோடு, படத்தின் நாயகியோடு மற்றவர்கள் பேச முடியாதபடியும், இவர் இடையில் புகுந்து பேசுவது பலரை கடுப்படையவும் வைத்துள்ளதாம். எப்போதும் நடிகை இருக்கும் இடத்தில் அவரது குரல் மட்டும் ஓங்கி ஒலிக்கிறதாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!