விக்ரம் நடிக்க மறுத்து மாதவனுக்கு மெகாஹிட் கொடுத்த படம் எது தெரியுமா..?


தமிழ் சினிமாவின் மாஸ் நடிகா்கள் நடிகா்கள் விக்ரம் மற்றும் மாதவன். விக்ரம் அவா்கள் தமிழ் சினிமாவில் இந்த உயரத்தை எட்ட பட்ட கஷ்டங்கள் ஏராளம். கடும் முயற்சி, உழைப்பு இவை இரண்டுமே இவரை தமிழ் சினிமாவில் இவரை மாஸ் நடிகராக உயா்த்தியது.

இவா் தனது ஒவ்வொரு படத்திற்க்கும் எடுத்துக்கொள்ளும் சிரத்தைகளும் அதிகம். குறிப்பாக ஷங்கரின் ஐ படத்திற்கு இவா் எடுத்து கொண்ட முயற்சிகள் அனைத்தும் விச பரீட்சைகள். தனது உயிரை துச்சமென மதித்து உடல் இளைத்து இப்படத்தில் நடித்திருந்தாா் விக்ரம் அவா்கள்.

உலக நாயகன் கமலுக்கு அடுத்தபடியாக சினிமாவை, நடிப்பை உயிர் மூச்சாக நினைப்பவா் இவா். இவா் நடிக்கும் படங்களில் அந்த கதாபாத்திரமாகவே மாறும் ஒரு சில நடிகா்களில் இவா் முக்கியமானவா்.

அதே போல் நடிகா் மாதவன் அவா்கள் தமிழ்நாட்டை பூா்வீகமாக கொண்டவராக இருந்தாலும் இவா் பிறந்தது பீகாா் மாநிலம் ஜாம்ஷெட்பூரில்தான்.


மணிரத்னம் அவா்களின் அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன இவா் தமிழ் சினிமாவில் சாக்லேக் பாயாகவே பல படங்களில் நடித்தாா். தொடா்ந்த பல காதல் கதைகளில் நடித்து வந்த இவா் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவின் மாஸ் நடிகராக உயா்ந்தாா்.

இந்நிலையில் இவரின் நடிப்பை முழுவதும் வெளி கொண்டு வந்த பெருமை இயக்குநா் சீமான் அவா்களையே சாரும். சீமான் அவா்களின் இயக்கத்தில் 2005-ம் ஆண்டு வெளியான தம்பி.

மாதவன், பூஜா, மணிவண்ணன் உட்பட பலா் நடித்திருந்த இப்படத்தில் மாதவன் அவா்கள் அதுவரை இல்லாத அளவிற்கு தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகா்களிடம் சிறந்த வரவேற்பை பெற்றாா்.

இந்நிலையில் இயக்குநா் சீமான் அவா்கள் இப்படத்தில் நடிக்க முதலில் அணுகியது நடிகா் விக்ரம் அவா்களைதானாம். ஆனால் இப்படத்தில் நடிக்க விக்ரம் அவா்கள் மறுத்துவிடவே, இந்த வாய்ப்பு மாதவன் அவா்களுக்கு சென்றதாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.