ரஜினி – முருகதாஸ் இணையும் படத்தின் தயாரிப்பாளர் திடீர் மாற்றம்..!!


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘சர்கார்’. இப்படத்தின் சில காட்சிகளுக்கு தமிழக அமைச்சர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்கள். இதனால் சர்ச்சையாகி சில காட்சிகளை நீக்கியது படக்குழு.

மேலும், படம் வெளியாகும் முன்பு கதை சர்ச்சையில் சிக்கியது. புகார் கூறிய வருண் ராஜேந்திரனின் பெயரையும் படத்தின் துவக்கத்தில் குறிப்பிடுவதாக ஏ.ஆர்.முருகதாஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனால் அடுத்ததாக அவரது இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தை தயாரிக்க ஒப்புக் கொண்டிருந்த நிறுவனம் விலகிக் கொண்டது. இதனைக் கேள்விப்பட்ட ரஜினி, உடனடியாக லைகாவிடம் பேசினார்.

அடுத்ததாக மீண்டும் ரஜினி படம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குநர் என்றவுடன் தயாரிப்பதாக லைகா ஒப்புக் கொண்டுள்ளது. ‘2.0’ மற்றும் ‘பேட்ட’ ஆகிய படங்களின் வெளியீட்டு பணிகள் முடிவடைந்தவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.