அதிகாலையில் சுவர் ஏறி குதித்து ஓடியது ஏன்..? விஷால் மீது இளம்பெண் பரபரப்பு புகார்..!!


தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் இரண்டிலும் தலைமை பொறுப்பில் இருப்பவர் விஷால். ‘மீடூ’ என்ற இயக்கம் மூலம் சமூக வலைத்தளங்களில் சின்மயி உள்ளிட்ட பல பெண்கள் திரைப் பிரபலங்கள் மீது ‘மீடூ’ வில் பாலியல் புகார்களை கூறியிருந்தனர்.

வைரமுத்து, முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், சுசி கணேசன் உட்பட பல்வேறு துறையை சேர்ந்த பல பிரபலங்கள் பாலியல் புகாரில் சிக்கினர். இதைத் தொடர்ந்து நடிகைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் குழு ஒன்று அமைக்கப்படும் என விஷால் அறிவித்தார்.

இந்நிலையில், விஸ்வதர்ஷினி என்கிற பெண் தனது முகநூலில் நேரலையாக வீடியோவில் பேசும் போது நடிகர் விஷால் குறித்து பரபரப்பு தகவல்களை கூறியுள்ளார்.

கோபாலபுரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்கு அதிகாலை 2 மணிக்கு வந்த விஷால், 2 மணி நேரம் கழித்து, அதாவது 4 மணியளவில் பின் வாசல் வழியாக சுவர் ஏறி குதித்து ஓடியது ஏன்? எதற்காக அங்கே வந்தார்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சி.சி.எல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது விஷால் எப்படியெல்லாம் ஆட்டம் போட்டார் என தன்னிடம் ஆதாரம் இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!