சர்கார் விவகாரம்.. இயக்குனர் முருகதாஸ் கைது செய்யப்பட்டாரா..? அதிர்ச்சி தகவல்..!!


இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளி அன்று வெளியிடப்பட்ட திரைப்படம் சர்கார். இந்த படத்தில் சர்ச்சைக்குரிய அரசியல் கருத்துகள் இடம் பெற்று இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக கருத்துக்களும் காட்சிகளும் இடம் பெற்று இருப்பதாகவும், அதனை உடனடியாக நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.

அதேசமயம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சர்கார் திரைப்படத்தின் பேனர்களையும்,கட் அவுட்டுகளையும் சேதப்படுத்தி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இந்த நிலையில், இன்று இரவு இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் வீட்டுக்கு போலீஸ் சென்றது. சர்கார் படத்தின் சர்ச்சை தொடர்பாக அவரை கைது செய்வதற்காக போலீசார் சென்றதாக அந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் டிவிட்டரில் ட்வீட் செய்யப்பட்டு இருந்தது.

இதற்கு காவல்துறை சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர். முருகதாஸை கைது செய்வதற்காக செல்லவில்லை எனவும், வழக்கமான ரோந்து பணிகளுக்காகவே சென்றதாகவும் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!