நான் கட்சிகளுக்கு ஊதுகுழல் அல்ல.. மக்களின் கருவி – கமல்ஹாசன்


64வது பிறந்தநாளையொட்டி சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

20 தொகுதிகளில் இடைத்தேர்தல் வந்தால் அதை சந்திக்க தாயாராக இருக்கிறோம். நான் எந்த கட்சிக்கும் குழலோ, ஊதுகுழலோ கிடையாது. நான் மக்களின் கருவி. நமது நாட்டில் அரசியல் சரியில்லை என்று குற்றச்சாட்டு உள்ள நிலையில், பிற நாட்டு (இலங்கை ) அரசியல் குறித்து பேசுவது தவறு. சுகாதாரமான ஊழலற்ற அரசியலை கொண்டு வருவதே லட்சியம் என்று கமல்ஹாசன் கூறினார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!