நாளை முதல் உலகை ஆளும் சர்கார்… செம்ம சர்ப்ரைஷ் காத்திருக்கு பாருங்க..!!


இயக்குனர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான படம் மெர்சல். உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.125 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சர்கார் படம் வெளியாகவுள்ளது. ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், அதிகளவில் வசூல் குவித்து சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா என்று நாடு முழுவதும் இப்படம் வெளியாகவுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவில் மட்டும் இன்றே திரையிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக ரசிகர்கள் பட்டாளங்கள் உள்ள கேரளாவில் விஜய்க்காக எந்த ரசிகருக்கும் இல்லாத வகையில், 175 அடியில் கட் அவுட் ஒன்றை உருவாக்கியுள்ளனர். கேரளாவில் 402 திரையரங்குகளில் வெளியாகும் சர்கார் 1200க்கும் அதிகமான காட்சிகள் திரையிடப்படயிருக்கிறது. மேலும், ஏற்கனவே பல திரையரங்குகளில் சர்கார் மராத்தான் காட்சியும் காலை 4 மணியிலிருந்து திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


உக்ரைன், போலந்து, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் உள்பட 80 நாடுகளுக்கும் அதிகமாக உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் 3,400க்கும் அதிகமான திரையரங்குகளில் சர்கார் படம் திரையிடப்படுகிறது. முதல் முறையாக அதிக நாடுகளில் வெளியிடப்படும் படங்களில் தளபதியின் சர்கார் முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சர்கார் திருட்டுக்கதை விவகாரத்தில் சிக்கி தற்போது அது முற்றிலும் ஓய்ந்த நிலையில், அதிக எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது. எந்தவித விளம்பரமும் இல்லாமல்,சர்கார் படம் மக்களிடையே சென்று வைரலாகியுள்ளது.

திருநெல்வேலி ராம் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தளபதி விஜய்க்காக 175 அடியில் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரையரங்கில் டிக்கெட் முன் புக்கிங் மூலம் அதிக வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், சர்கார் படத்தைப் பார்ப்பதற்கான முக்கிய காரணங்களை இங்கு காண்போம்:

கத்தி மற்றும் துப்பாக்கி ஆகிய படங்களைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் சர்கார் படம் உருவாகியுள்ளது.


தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலையும் மிகப்பெரிய அரசியல் பின்னணிக் கதையையும் மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

பைரவா படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அதுவும், பூத் ஏஜெண்டாக இப்படத்தில் தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்தியுள்ளார் என்பது படத்தின் டீசரை பார்க்கும் போதே தெரிந்துவிட்டது.

முதல் முறையாக தளபதி விஜய்யுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். ஒரு பக்கம், இவர் மாவட்ட ஆட்சியராக வலம் வருகிறார் என்றும், மறுபக்கம், அரசியல்வாதியின் மகளாக நடித்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அது ராதாரவியா? அல்லது பழ.கருப்பையாவா? என்பது மட்டும் படம் பார்க்கும் போது தான் தெரியவரும்

சர்கார் படத்தின் டீசர் வெளியான 5 மணிநேரத்திலேயே 10 மில்லியன் பார்வைகளையும், 1 மில்லியன் லைக்குகளையும் பெற்று புதிய சாதனைப் படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!