காதல் தோல்வியால் வாரிசு நடிகருக்கு இப்படியொரு நிலைமையா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!


வாரிசு நடிகர் ஒருவர் நடிக்கத் தெரிந்த நடிகையை காதலித்தார். நடிகையும் அவருடன் நன்றாகத் தான் பழகி வந்தார். திருமணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் குடித்தனம் நடத்தினார்கள்.

எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்தபோது, நடிகை நடிகரை கழற்றிவிட்டுவிட்டார்.

நடிகைக்கு தொழில் அதிபர் ஒருவருடன் நெருக்கம் ஏற்பட்டதால் அவர் சொல்லி நடிகரை கழற்றிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் நடிகை அந்த தொழில் அதிபரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள். காதல் முறிவால் பாவம் நடிகர் தான் பயங்கர அப்செட்டாகியுள்ளார்.

நடிகையை பிரிந்த கவலையில் நடிகர் ஓவராக மது அருந்துகிறார். வெளியே வந்தால் எதுவும் நடக்காதது போன்று சிரித்துப் பேச முயற்சி செய்கிறார். இந்நிலையில் எங்கு சென்றாலும் நடிகரை பார்க்கும் ரசிகர்களோ, என்ன அண்ணா, காதல் பிரேக்கப் ஆகிவிட்டதாமே என்று கேட்கிறார்கள். ரசிகர்கள் மட்டும் அல்ல அவருக்கு தெரிந்தவர்களும் அதே கேள்வியை தான் கேட்கிறார்கள்.

எங்கு சென்றாலும் காதல் முறிவு பற்றி ஆளாளுக்கு துக்கம் விசாரிப்பது நடிகரை கோபம் அடைய செய்துள்ளது. இதனால் பொது நிகழ்ச்சிகள், சினிமா நிகழ்ச்சிகள் என்று எங்கும் செல்லக் கூடாது என்று முடிவு செய்துள்ளாராம். ஏற்கனவே அவர் சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இல்லை என்ற புகார் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் தான் தாடியும், குடியுமாக உள்ளார். அவரை பிரிந்த நடிகையோ உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகிவிட்டார். மேலும் கவர்ச்சி புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வருகிறார். அவர் வாழ்க்கை சந்தோஷமாகத் தான் சென்று கொண்டிருக்கிறது. நடிகர் தான் புலம்பித் தள்ளுகிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!