அடக்கடவுளே.. டாப்ஸி இதுக்காகதான் நடிக்க வந்தாங்களா..? வெளியாகிய தகவல்..!!


தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த டாப்ஸி தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர். வெயிட்டான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் சினிமா குறித்து அவர் கூறியதாவது,

நான் எம்.பி.ஏ. மார்க்கெட்டிங் படித்து சாதாரண வேலைக்கு செல்ல விரும்பினேன். எம்.பி.ஏ. தொடர்பான வேலைக்கு செல்ல நினைத்தேனே தவிர இப்படி ரிஸ்கான வேலைக்கு வருவேன் என்று நினைக்கவே இல்லை. எம்.பி.ஏ.வுக்காக தயாராகிக் கொண்டிருந்தபோது ஒரு வருட காலத்தை ஓட்டவே படங்களில் நடிக்க வந்தேன்.

ஒரு தமிழ், ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஜாலியாக என்ஜாய் பண்ணலாம் என்று நினைத்தேன். சும்மா வீட்டில் உட்கார்ந்து படிக்காமல் இடையே புது விஷயத்தை கற்றுக் கொள்ள விரும்பினேன். நான் நடித்த தெலுங்கு படம் ஹிட்டானது. தனுஷுடன் சேர்ந்து நடித்த ஆடுகளம் தேசிய விருதுகளை பெற்றது. அப்பொழுது தான் சினிமாவை சீரியஸாக எடுத்துக் கொண்டேன்.


எதிர்பார்க்காததை செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு தென்னிந்தியாவில் பட வாய்ப்பு கொடுத்தவர்கள் பற்றி கூகுள் செய்து பார்த்தபோது அவர்கள் எல்லாம் பெரிய ஆட்கள் என்பது தெரிய வந்தது. ஒரு முறையாவது மணிரத்னம் சாரின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அவரின் ஹீரோயின்கள் ரொம்ப ரியலாக இருப்பார்கள் என்கிறார் டாப்ஸி.

மீ டூ இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் டாப்ஸி. நன்றாக நடிப்பதற்கு மட்டும் அல்ல மனதில் பட்டதை துணிச்சலாக பேசுவதற்கும் பெயர் போனவர் டாப்ஸி. சினிமா தொழிலில் சம்பாதிக்கும் பணத்தை வைத்து தங்கையுடன் சேர்ந்து பிசினஸ் செய்து வருகிறார். சினிமா இல்லை என்று ஆகிவிட்டால் வருமானம் வேண்டும் என்பதால் பிசினஸ் செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!