நடிகை சரண்யாவிற்கு இப்படியொரு கவலையா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


தமிழ் சினிமாவில் அம்மா வேடம் என்றால் இயக்குநர்களின் நினைவில் மட்டும் அல்ல ரசிகர்களுக்கும் சட்டென்று நினைவுக்கு வருபவர் சரண்யா பொன்வன்னன் தான். கிராமத்து அம்மாவாக கலக்கியவர், தற்போது சென்னை அம்மாவாகவும் நடித்து பாராட்டு பெற்றுவிட்டார்.

இப்படி அம்மா வேடத்திற்காகவே அவதரித்தது போல, அத்தனை அம்மா கதாபாத்திரங்களை சிறப்பாக கையாண்டு பிஸியான அம்மாவாக கோடம்பாக்கத்தில் வலம் வரும் சரண்யா பொன்வன்னன், சூப்பர் ஹிட் திரைப்படமான ‘நாயகன்’ மூலம் தான் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

முதல் படமே மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தாலும், அப்படத்தை தொடர்ந்து சரண்யா ஹீரோயினாக தமிழ் சினிமாவில் ஜொளிக்காமல் போனது பலருக்கும் தெரிந்தது தான். அதன் பிறகு ஒரு சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர் திருமணம் செய்துக்கொண்டு நடிப்பதை தவிர்த்து வந்தார்.


பிறகு அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கியவர், தற்போது பிஸியான நடிகையாக வலம் வந்தாலும், ஹீரோயினாக தன்னால் ஒரு ரவுண்ட் வர முடியவில்லையே, என்று தற்போதும் வருத்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறாராம்.

இது குறித்து சமீபத்திய பேட்டில் ஒன்றில், “நாயகன் எனது முதல் படம். மிகப்பெரிய வெற்றி பெற்றபோது நான் ரொம்ப சந்தோஷமாக இருந்தேன். அப்படத்தை தொடர்ந்து எனக்கு பட வாய்ப்புகள் வந்தாலும், அப்போது ஹீரோயின்கள் சாதாரணமாக செய்த காரியங்களை நான் செய்ய மாட்டேன் என்று சொன்னேன், குளியல் காட்சி, முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டேன், என்று கூறியதால் என்னை அனுகியவர்கள் விலகி சென்றார்கள். பிறகு கல்யாணம், நடிப்புக்கு டாடா காட்டினேன். திடீரென்று கிடைத்த அம்மா வேடம் நான் போடும் கண்டிஷனுக்கு சரியாக இருந்ததால் அதையே பிடித்துக்கொண்டே. தற்போது வண்டி நல்லா தான் போய்கிட்டு இருக்கு. இருந்தாலும், ஹீரோயினா சினிமாவில் ஒரு ரவுண்ட் வர முடியல என்ற கவலையும் இருக்கு.” என்று சரண்யா பொன்வன்னன் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!