இவரா இப்படி.. போதையில் ரகளை செய்து படக்குழுவை மிரள வைத்த நடிகை..!!


பரிபூரணமான நடிகை படப்பிடிப்பு தளங்களில் குடித்து விட்டு செய்யும் ரகளை தாங்க முடியவில்லையாம். முழு போதையில் தலைகால் புரியாமல் ஆட்டம் போடுகிறாராம் நடிகை.

சீரியலில் இருந்து வெள்ளித்திரைக்கு போன இயக்குநரால் அறிமுகம் செய்யப்பட்டவர் இந்த நடிகை. கஜினி நடிகையின் முகச்சாயலில் இருந்ததால், அவரைப் போலவே தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டார். ஆனால், அறிமுகப் படமே தோல்வி கண்டது. இதனால் சொல்லிக் கொள்ளும்படி நடிகைக்கு படவாய்ப்புகள் அமையவில்லை.

ஆனபோதும் எப்படியும் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தைப் பிடித்தே தீருவது என தொடர்ந்து படவாய்ப்புகளுக்காக போராடி வருகிறார். கதாபாத்திரத்திற்காக மொட்டைப் போட்டுக் கொள்ளக்கூட தயங்குவதில்லை. இப்படியாக அர்ப்பணிப்புடன் ஒருபுறம் நடித்து வரும் நடிகையின் மறுபக்கம் அப்படியே தலைகீழ்.


சமீபகாலமாக படப்பிடிப்பு தளத்திலேயே குடித்து விட்டு தான் நடிக்க வருகிறாராம் அம்மணி. குடித்துவிட்டும் அமைதியாக இருப்பதில்லை. வில்லன்களுக்கு இணையாக படப்பிடிப்பு தளத்தில் இருப்பவர்களிடம் வம்பிற்கு செல்கிறாராம். போதையில் அவர் பண்ணும் ரகளைகளைத் தீர்ப்பதற்குள்ளாகவே படக்குழுவிற்கு போதும் போதுமென்றாகி விடுகிறதாம்.

இதனால் அவரைப் புதுப்படங்களில் ஒப்பந்தம் செய்யவே இயக்குநர்கள் அஞ்சுகிறார்கள். கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்றிருந்தால் எப்படி? ஒன்று நடிப்பிற்காக மதுப்பழக்கத்தை விட வேண்டும், இல்லையென்றால் நடிப்பிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும். இந்த இரண்டில் ஒன்றைச் செய்யாமல் வீணாக இப்படி பேரைக் கெடுத்துக் கொள்கிறாரே என அவரது நலம் விரும்பிகள் கவலையில் உள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!