ரீமாசென் கௌதம் மேனன் இயக்கிய மின்னலே படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து விஜய்யின் பகவதி, விக்ரமின் தூள், சிம்புவின் வல்லவன் ஆகிய படங்களில் நடித்தவர்.இதில் இவருக்கு வல்லவன், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களை செம்ம பெயரை பெற்று தந்தது, அதை தொடர்ந்து பாலிவுட்டிலும் கால் பதித்தார்.
பெரிய ஹீரோயின் ஆவார் என்று எதிர்ப்பார்க்க, மார்க்கெட் இழந்து ஒரு தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.ஓட்டல் அதிபர் ஷிவ்கரன் சிங்குக்கும் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு பின் ரீமாசென் நடிக்க மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கணவர் தொடர்ந்து நடிக்க அனுமதி அளித்தார்.
இதை தொடர்ந்து கேங்க்ஸ் ஆப் வசேபூர் என்ற இந்திப் படத்தில் நடித்தார். தொடர்ந்து சொசைட்டி என்ற இந்தி படத்திலும் சட்டம் ஒரு இருட்டறை என்ற தமிழ் படத்திலும் நடித்தார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வர, இவரை பார்த்த ரசிகர்களுக்கு செம்ம ஷாக், ஏனெனில் உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!