100 ஆண்டுகால தமிழ் சினிமாவை மிஞ்சிய கெட்ட வார்த்தைகள்..!! வட சென்னை படத்தால் அதிர்ச்சி..!


‘கெட்ட வார்த்தைகள் கதைக்கு மிக அவசியமாகப் பட்டதால் ‘வட சென்னை’ படத்துக்கு ‘ஏ’ சர்டிபிகேட்டை நாங்களே வாலண்டியராகக் கேட்டு வாங்கினோம்’ என்று பேட்டிகளில் பெருமை பொங்க கூறிவருகிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

‘ஏ’ சர்டிபிகேட் ஓகே. அதுக்காக இவ்வளவு ஓவரான கெட்ட வார்த்தைகளா என்று படம் பார்த்த ஜனங்கள் பொங்க ஆரம்பித்திருக்கிறார்கள். கதாநாயகன் தனுஷ் தொடங்கி வில்லன்கள் சமுத்திரக்கனி, அமீர், கிஷோர், என்று அனைத்து முக்கியப் பாத்திரங்களுமே படம் முழுக்க …த்தா…ம்மா.. என்று தொடங்கி இங்கே எழுத முடியாத அளவுக்கு கெட்டவார்த்தைகளைப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக, உதட்டை தனுஷுக்கு லீஸுக்கு விட்டவர் எப்போதும் கவ்விக்கொண்டே திரியும் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் வாயைத் திறந்தால் குழாயடி சண்டைகளில் புழங்கும் வார்த்தைகள் வெட்கித்தலை குனியும் அளவுக்கு வண்டிவண்டியாய் கெட்டவார்த்தைகளகொட்டுகிறார். ஆண்ட்ரியா இன்னும் ஒருபடி மேலேபோய் ‘இவன் கூடயும் படுத்ததால என்னை தேவிடியான்னு நினைச்சீங்களாடா? என்று ஆரம்பித்து …ஐய்யோ ஐய்யய்யோ…

சுருக்கமாக சொன்னால் 100 வருட தமிழ்சினிமா காணாத கெட்ட வார்த்தைகள் ‘வட சென்னை’ படத்தில் கொட்டிக்கிடக்கின்றன. நம்ம சென்சாருக்கு என்னதான் ஆச்சி?

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!