என்னுடைய திருமணத்துக்கு தடையாக இருப்பது இதுதான்..!! நடிகை பூர்ணா கவலை..!!


நடிகை பூர்ணா கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். இவர் மலையாள சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படம் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார். அதையடுத்து பல படங்களில் நடித்தார். இவர் தமிழில் கடைசியாக நடித்த படம் ‘சவரக்கத்தி’. இந்தப் படத்தை இயக்குனர் ராம் இயக்கியிருந்தார். இந்தப் படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் ஒரு சில படங்களில் வில்லியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய திருமண விசயம் பற்றி தற்போது பேசியுள்ளார். ‘‘என் அம்மா என்னுடைய திருமணம் பற்றி தினந்தோறும் பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால் இதில் ஜாதி தான் மிகப்பெரிய தடையாக இருக்கிறது. அதையும் தாண்டி திருமணம் பேச வருபவர்கள் நான் சினிமாவில் இருந்து விலக வேண்டும் என்று கூறுகிறார்கள்.

நான் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. அப்படியே காதலித்தாலும் அங்கும் இதுபோல எதிர்பார்க்கத்தானே செய்வார்கள். நடிப்பு ஒரு தடையாக இருக்கும் இந்த விசயத்தால் தான் என் திருமணம் கால தாமதமாகிறது’’ என்றார் பூர்ணா.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!