சபரி மலைக்கு பெண்கள் அனுமதி..!! செம்ம கடுப்பாகிய நடிகை நவ்யா நாயர்..!!


சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு விசாரித்து, பத்து முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, தீர்பு அளித்தனர்.

இந்த தீர்ப்பின் போது, நீதிபதிகள் கூறியது, “வழிபாடு ஆண்கள், பெண்களுக்கான இருவருக்குமான அடிப்படை உரிமை. மாதவிடாயை காரணமான வைத்து பெண்களின் உரிமைகளை பறிக்க முடியாது. அனைத்து வயது பெண்களும் ஐயப்பனை வழிபட சம உரிமை உள்ளவர்கள்” என்றனர். இந்த தீர்ப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது.

இந்நிலையில் நடிகை நவ்யா நாயர் இந்த தீர்ப்பு குறித்து கூறூகையில்,“கோர்ட்டு தீர்ப்பை நான் மதிக்கிறேன். இருந்தாலும், சபரிமலை கோவிலின் பாரம்பரிய பழக்கத்தை, பின்பற்ற வேண்டும் என்பது எனது கருத்து”என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!