தயாரிப்பாளரை துரத்திய முன்னணி நடிகர்..!! எதற்காக தெரியுமா..?


ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். நேற்று நடந்த முதல் நாள் சந்திப்பின்போது அவர் ரசிகர்களிடம் பேசும்போது கூறியதாவது,

நான் ஆரம்பத்தில் வில்லான நடித்து கொண்டிருந்தேன். அப்போது தயாரிப்பாளர் கலைஞானம் அவர்கள் என்னை கதாநாயகனாக வைத்து பட் எடுப்பதாக கூறினார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

எனக்கு அவர் அவ்வளவாக பரிச்சயம் இல்லாதவர். எனக்கு பயமாக இருந்தது. எனவே அவரை தவிர்க்க நினைத்து அதிக சம்பளம் கேட்டேன்.


அப்போது நான் 25 முதல் 30 ஆயிரம் சம்பளம் வாங்கி கொண்டிருந்தேன்.

எனவே 50 ஆயிரம் கேட்டேன். அப்படி கேட்டாலாவது ஒப்பந்தம் செய்யாமல் சென்று விடுவார்கள் என்று கேட்டேன். ஆனால் 2 நாட்கள் கழித்து ஒரு பேப்பர் பார்சலில் அட்வான்சாகவே 30 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். பிறகு என்னால் மறுக்க முடியவில்லை.

அந்த படத்தில் அந்த காலக்கட்டத்தில் பெரிய நடிகராக இருந்த ஸ்ரீகாந்த் வில்லான நடித்தார். ஸ்ரீபிரியா கதாநாயகியாக நடித்தார். என்னையும் மக்கள் கதாநாயகனாக ஏற்று கொண்டார்கள் என்று கூறினார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!