நடிகர் சிவகுமார் இப்படி சொல்லிட்டாரே..!! வியப்பில் அசந்துபோன மக்கள்..!!


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் செட்டிப்பாளையம் சாலையில் பொன்னி மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனை தனது மருத்துவ சேவையை மேலும் பல சிறப்பு வசதிகளுடன் விரிவாக்கம் செய்து 100 படுக்கைகளுடன் நவீன வசதிகளுடன் அமைந்துள்ளது.

இதன் திறப்பு விழாவிற்கு நடிகர் சிறப்பு சிவகுமார் விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர் கூறுகையில், ஒவ்வொருவரது ஆரோக்கியம் அவரவர் கையில் தான் உள்ளது. நமது முன்னோர்கள் பழைய சோறு சாப்பிட்டு வாழ்ந்தார்கள். ஆனால், நாம் காபி, டீ குடித்து வாழ்கிறொம். இந்த பழக்கம் எங்கிருந்து வந்தது. காலையில் பழைய சோறுடன் மோர் கலக்கி 5 வெங்காயம் சேர்த்து சாப்பிட்டு வந்தால், குடல் நோய் நீங்கும்.

ஆனால், தொடர்ந்து காபி, டீ குடித்தால், எதிர்காலத்தில் வயிறு தான் கெட்டுப்போகும். இவ்வளவு, ஏன் சாப்பிடும் போது கூட தரையில் அமர்ந்து தான் சம்மனம் போட்டு சாப்பிட வேண்டும். குனிந்து நிமிர்ந்து தான் கோலம் போட வேண்டும், வீட்டில் மாவு ஆட்ட வேண்டும். இவையெல்லாம் அடிப்படையான நமது பழக்கவழக்கங்கள். இவற்றையெல்லாம் நாம் மறந்து போனதால், நமது உடல்நலம் கெட்டது, நோய் தொற்று ஏற்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!