பிரபல காமெடி நடிகர் முத்துக்காளைக்கு இப்படியொரு நிலைமையா..? என்ன செய்கின்றார் தெரியுமா..?


செத்து செத்து விளையாடுவோமா என்று வடிவேலு-முத்துக்காளை இடம்பெற்ற காமெடி காட்சி இப்போது பார்த்தாலும் ரசிக்கும் வண்ணம் இருக்கும். வடிவேலு அவ்வப்போது சினிமா படங்களில் தலைகாட்டி வருகிறார்.

ஆனால் முத்துக்காளை நீண்ட வருடங்களாக சினிமா பக்கம் காணவில்லை, காரணம் குடி. இவரும் அல்வா வாசுவும் குடிப்பதை பார்த்த வடிவேலு கூட இப்படியே குடித்தால் முதலில் வாசு அடுத்து நீ சாகப்போற என்று கூறியிருந்தாராம்.

அவரின் அந்த வார்த்தைக்கு பின் தன் மனதில் பயம் வந்துவிட்டதாகவும் குடியை நிறுத்திவிட்டதாகவும் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் முத்துக்காளை.

குடிக்கு அடிமையாகி மனைவி, குழந்தைகளை கவனிக்காமல் இருந்த முத்துக்காளை வாழ்க்கையில் இப்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது அவர் பாலிவுட்டில் மேரே இந்தியா என்ற படத்தில் நடிக்கிறாராம். அப்படம் தமிழில் நம் இந்தியா என்ற பெயரிலும் உருவாகி வருகிறதாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!