ரசிகர்களால் சூர்யாவிற்கு இப்படியொரு நிலைமையா..? என்ன நடந்தது தெரியுமா..?


சூர்யாவின் என்ஜிகே படத்தின் படப்பிடிப்பு ராஜாமுந்திரியில் நடைபெற்று வருகிறது. இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் உருவாகும் உந்த படம் அங்கு படமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் NGK படப்பிடிப்பு அங்கே நடைபெறுகிறது என்று இயக்குனர் செல்வராகவன் ட்விட்டரில் பதிவிட்டதிலிருந்து அங்குள்ள ரசிகர்கள் பலர் சூர்யாவை காண படப்பிடிப்பு தளத்துக்கு வந்தவண்ணம் இருந்தனர்.

நேற்று சூர்யாவை காண படப்பிடிப்பு தளத்துக்கு ஒரே நேரத்தில் 5000திற்கும் மேற்ப்பட்ட ரசிகர்கள் குவிந்துவிட்டனர். கேரவனில் இருந்து வெளியே வந்த சூர்யாவை சூழ்ந்துகொண்டனர். அந்த கூட்டத்தில் சிக்கிய சூர்யா வெளியே வருவதற்குள் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்.

அதனால் அன்றைய ஷூட்டிங் முழுவதும் கேன்சல் செய்யப்பட்டுவிட்டதாம். இந்த சம்பவம் நடந்த ஆந்திராவிலும் சூர்யா ரசிகர்கள் மிக அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!