ஆடு, மாடுகள பிரிக்கிற மாதிரி பிரித்து காட்டுகிறேன்..!! சூளுரைத்த வைஷ்ணவி..!!


பிக்பாஸ் வீட்டில் என்ன பிரச்சனை வந்தாலும் பேசியே சரி செய்பவர் வைஷ்ணவி. ஏன் இப்படி கூறுகிறோம் என்று அவர் தலைவராக இருந்து போது நிகழ்ச்சி பார்த்தவர்களுக்கு புரியும்.

வீட்டில் இருவரை மிகவும் தைரியமாக இருந்துவந்த அவர் இன்று வந்த புதிய புரொமோவில் தேம்பி தேம்பி அழுகிறார். பின் எவ்வளவு மோசமாக என்னை விமர்சனம் செய்ய முடியுமோ செய்கிறார்கள் என்று அழுகிறார்.

பின் எல்லோரையும் ஆட்ட பிரிக்கிற மாதிரி, மாட்ட பிரிக்கிற மாதிரி ஒன்னு ஒன்னையும் பிரித்து காட்டுகிறேன் என சொடக்கு போட்டு சவால் விடுகிறார்.

அவரின் இந்த கோபத்திற்கு யார் காரணம், அப்படி என்ன பிரச்சனை என்பது இன்றைய நிகழ்ச்சி காண காத்திருப்போம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!