பிக்பாஸில் வீட்டில் கதறி அழுத ஐஸ்வர்யா..!! அதிர்ச்சியாகிய சக போட்டியாளர்கள்..!!


பிக்பாஸ் வீட்டில் தற்போது மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. ராணி மகா ராணி டாஸ்க் கொடுக்கப்பட்டு ஐஸ்வர்யா சர்வாதிகாரி ராணியாக நியமிக்கப்பட்டார். அவருக்கு உதவியாக ஜனனி, டானி இருந்தனர்.

ஐஸ்வர்யா தன் இஷ்டத்துக்கு பலருக்கும் அதிருப்தியளிக்கும் வகையில் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் சிறையில் மஹத், யாஷிகா, ஷாரிக், ரித்திகா என பலரும் அடைக்கப்பட்டனர்.

மேலும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பொன்னம்பலம், ஐஸ்வர்யாவை பிடித்து நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டார். இதனால் திடீரென ஐஸ்வர்யா தலை தெறிக்க கதறி அழுது ஓடினார்.

இதனால் மற்றவர்கள் பதட்டமானார்கள். பின் கன்ஃபெஸன் ரூமில் சென்று பிக்பாஸிடம் அழுதார். அவரிடமிருந்து டாஸ்கை சிறப்பாக செய்ததற்காக பாராட்டும் கிடைத்தது. மேலும் இதனால் இந்த டாஸ்க் முடிவடைந்ததாக பிக்பாஸ் அறிவித்தார். பொதுமக்கள் ஜெயித்தனர். மேலும் ராணி தோற்றுவிட்டார்.

ஐஸ்வர்யாவை தொடர்ந்து எவிக்சனில் இருந்து பிக் பாஸ் காப்பாற்றி வருகிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!