16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக்பாஸ் வீட்டில் இப்போது 11 பேர் இருக்கின்றனர்.
கடைசியாக வைஷ்ணவி வீட்டைவிட்டு வெளியேறினார், ஆனால் தற்போது சீக்ரெட் அறையில் இருந்துகொண்டு மற்ற போட்டியாளர்களை கவனித்து வருகிறார். வைஷ்ணவி மீண்டும் வீட்டிற்குள் செல்லும்போது பிரச்சனை வெடிக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
இந்த நேரத்தில் வைஷ்ணவி வீட்டைவிட்டு வெளியேறும் போது எல்லோரும் வருத்தமாக இருக்க மஹத்-யாஷிகா செய்த விஷயம் புகைப்படமாக வைரலாகி வருகிறது.
அதாவது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மொபைலை வைத்து இருவரும் தனியாக சென்று செல்பி எடுத்துள்ளனர். சமூக வலைதளத்தில் அந்த புகைப்படம் செம வைரலாகி வருகிறது.
*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!