இதற்காகதான் பாத்ரூமில் நடந்த கசமுசாவை கண்டுக்கொள்ளவில்லையா..? கமலை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!!


பெரிய முதலாளி வீட்டில் நடப்பது எல்லாம் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று பார்வையாளர்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் டமில்நாடு கெட்யாது அதனால் எங்களுக்கு டமில் கலாச்சாரம் தெரியாது என்று சில போட்டியாளர்கள் கூறி வருகிறார்கள்.

எல்லாம் தலையெழுத்து என்று பார்வையாளர்கள் நொந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு அதிர்ச்சிகரமாக சம்பவம் நடந்துள்ளது.

பெரிய முதலாளி
பாத்ரூம்
பெரிய முதலாளி வீட்டில் கூத்தடிக்கும் 4 பேரில் மூன்று பேர் ஒரே பாத்ரூமில் இருந்து வெளியே வந்துள்ளனர். சுருட்டை முடிக்காரர் பத்த வைக்கும் வேலை பார்க்கும் போட்டியாளருடன் பாத்ரூம் இருக்கும் பகுதியில் நின்று மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார். அப்போது பாத்ரூமில் இருந்து வாரிசு நடிகர் வெளியே வந்து அந்த இரண்டு பேரின் மோதலை பார்த்தும் பார்க்காதது போன்று நமக்கேன் வம்பு என்று நைசாக சென்றுவிட்டார்.

பிளேபாய்
நடிகை
வாரிசு நடிகர் சென்ற சிறிது நேரத்தில் அதே பாத்ரூமில் இருந்து பிளேபாயும், அடல்ட் ஜோக் நடிகையும் வெளியே வந்தனர். அதை பார்த்த பார்வையாளர்களோ, டேய் என்னங்கய்யா நடக்குது? என்று அதிர்ச்சி அடைந்தனர். வழக்கமாக யாராவது இரண்டு பேர் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தால் பெரிய லாடு பலக்கு மாதிரி பஞ்சாயத்து பண்ண வரும் பிளேபாய் பாத்ரூமுக்குள் இருந்து வெளியே வந்த பிறகு சத்தமில்லாமல் இடத்தை காலி செய்துவிட்டார்.


கோவா
வைபவ்
கோவா படத்தில் ஒரு பாத்ரூமுக்குள் இருந்து ஆணும், பெண்ணும் ஜோடியாக வந்ததை பார்த்து வைபவ் ஆச்சரியப்பட்டு தனது நண்பர்களிடம் கூறுவார். ஆனால் பெரிய முதலாளி வீட்டில் நடந்தது அதை எல்லாம் மிஞ்சிவிடும் போலயே. ஒளிய முடியாது என்கிறார்கள். ஆனால் போட்டியாளர்கள் இப்படி அப்பட்டமாக செய்யும் விஷயங்கள் கேமராக்களில் பதிவாகி அந்த கருமத்தை எல்லாம் பார்க்க வேண்டி உள்ளது. ஆனால் நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு இது எல்லாம் அசிங்கமாகவே தெரியவில்லையா.

நியாயம்
ஆண்டவர்
ஏற்கனவே அந்த பிளேபாய் காதலி இருக்கிறாள் என்று கூறிக் கொண்டு இளம் நடிகையுடன் அடிக்கிற கூத்து போதவில்லை என்று இது வேறா? நல்லா இருக்குய்யா உங்க நியாயம். போட்டியாளர்களில் சிலருக்கு தான் நம் கலாச்சாரம் தெரியாது ஆண்டவருக்கு நல்லாவே தெரியும்ல. அவராவது என்ன கருமம் இது என்று கேள்வி கேட்கலாம் அல்லவா? அவர் கேட்டால் பதில் சொல்லித் தானே ஆக வேண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!