இரகசியமாக லட்சக் கணக்கில் நிதியுதவி செய்த தளபதி..!! எதற்காக தெரியுமா..?


எந்த விளம்பரமின்றி திரைப்பட நடிகரான நடிகர் விஜய் நடனகலைஞர்கள் சங்கத்திற்கு 15 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில், வெளியான படம் மெர்சல். இந்தப் படத்தில் ஜிஎஸ்டி குறித்தும், பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து விமர்சன வசனங்கள் இடம் பெற்றிருந்தன.

இதற்கு தமிழக பாஜக தலைவர்கள் பலரும் எதிர் கருத்து தெரிவிக்க, அதன்மூலம் படத்திற்கு பெரும் விளம்பரம் ஏற்பட்டு படம் வசூலைக் குவித்தது.


இந்நிலையில் மெர்சல் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து விஜய் தென்னிந்திய நடனக்கலைஞர்கள் சங்கத்திற்கு 15 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார். விஜய் வழங்கிய இந்த நிதித்தொகை, நடனக்கலைஞர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!