வனிதாவின் மிரட்டலுக்கு சரியான பதிலடி கொடுத்த பிரமுகர்! வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்பட்ட ஆடியோ

சமீபத்தில் பலரையும் வாய்க்கு வந்தபடி பேச வைத்த விசயம் வனிதாவின் மறுமணம் தான். இரண்டு மகள் ஏற்கனவே இருக்கும் நிலையில் பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் பீட்டர் பால் ஏற்கனவே எலிசபெத் என்ற பெண்ணை திருமணம் செய்து மகனும், மகளும் இருந்து பிரிந்து வாழ்வது தெரியவந்தது.

இதனால் பலரும் இதை சர்ச்சையாக பேசியது வனிதாவின் விமர்சனங்களை எடுத்து வைத்தனர். ஆனால் வனிதா எல்லோரையும் எதிர்த்து பேசி வாக்குவாதம் செய்து வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் தயாரிப்பாளர் ரவீந்தரன் வனிதாவின் திருமணம் பற்றி கருத்து கூறியிருந்தார். இதற்கு வனிதா மன்னப்பு கேட்க வேண்டும் என வாட்ஸ் அப்பில் ஆடியோ அனுப்பிவைத்தாராம்.

இதனால் ரவீந்திரன் வனிதா பற்றி நான் பேசியதற்கு காரணம் முறையாக டைவர்ஸ் பெறாமல் திருமணம் செய்ததுடன், பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் மற்றும் குழந்தைகள் அளித்த பேட்டியை பார்த்த பிறகு தான். வனிதாவின் ரசிகனாக எனக்கு அவர் செய்யும் தவற்றின் மீது ஆதங்கமாக உள்ளது. அதை தான் நான் வெளிப்படுத்தினே. இதற்காக நான் மன்னிப்பு கேட்க முடியாது என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!