பிக்பாஸ் வீட்டில் இரவு நேரங்களில் மதுபானம் தருகின்றார்களா..? வெளியாகிய தகவலால் பரபரப்பு..!!


பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் பலருக்கும் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது என்பதால் அவர்களுக்காகவே ஸ்மோக்கிங் ரூம் கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோல குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு Alcohol கொடுப்பார்களோ எனவும் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் சிலர் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் சென்ற வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த நித்யா பாலாஜி பிக்பாஸ் வீடு பற்றி பேசியுள்ளார்.

“பிக்பாஸ் வீடு என்பது ஒரு சொகுசான ஜெயில் என்று தான் சொல்ல வேண்டும். நினைத்ததை நினைத்த நேரத்திற்கு செய்ய முடியாது. ஏதாவது அறிவிப்பு கொடுத்து டார்ச்சர் செய்துகொண்டே இருப்பார்கள்” என கூறியுள்ளார்.

தாடி பாலாஜிக்கு குடிப்பழக்கம் உள்ள நிலையில் பிக்பாஸ் வீட்டில் Alcohol கொடுக்கப்படவில்லை என்று அவர் சூசகமாக தெரிவித்துள்ளார். அப்படி இருந்தும் அவர் இரணடாம் வாரமே கெட்ட வார்த்தையில் பேசினார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!