மகத் மட்டும் வெளியில வந்தால் விளக்கமாத்து அடி விழும்..!! காயத்ரி ஆவேசம்..!!


பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டுள்ள மகத் தான், பிக்பாஸ் வீட்டிலேயே இப்பொழுது மிக மகிழ்ச்சியான போட்டியாளர் என்று கூறலாம். அந்த அளவிற்கு ஒரு புறம் யாசிகா மறுபுறம் ஐஸ்வர்யா என மஜா செய்து கொண்டிருக்கிறார்.

இவரது ஒரு சில நடவடிக்கைகள் எல்லை மீறும் விதத்தில் இருப்பதாகவும் ரசிகர்கள் குற்றம் சாட்ட துவங்கியுள்ள நிலையில், இந்த விமர்சனங்கள் குறித்து மனம் திறந்திருந்தார் சென்ற சீசனின் போட்டியாளர்களுள் ஒருவரான காயத்ரி.


அண்மையில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்து அவர், மகத்தை தனக்கு நன்கு தெரியும் எனவும், அவர் நட்பாக தான் சக போட்டியாளர்களுடன் பழகுகிறார் என்றும் அவருக்கு ஆதரவாக அதில் பேசி இருந்தார்.

மேலும், வெளியேயும் இப்படிதான் மிக நட்பாக பழகுவாரா…? என கிண்டலாக கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘வெளியே இப்படி நடந்துகொள்ள மாட்டார்’ என்று கூற, ‘அவரது கேள் பிரன்ட் அதற்கு காரணமாக இருக்கலாம், இப்படி சேட்டைகள் செய்தால் விளக்கமாத்து அடி விழும்ல’ என்ற தொகுப்பாளரின் கருத்தினையும் ஒப்புக் கொண்ட அவர், ‘பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்ததும் விளக்கமாத்து அடி அவருக்கு கண்டிப்பாக கிடைக்கும்’ என்றும் நகைச்சுவையாக பதில் அளித்து இருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!