நான் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு அவர்தான் காரணம்..!! நடிகை தபு உருக்கம்..!!


இந்தியில் பிரபல நடிகையான தபு தமிழில் சிறைச்சாலை, காதல் தேசம், இருவர் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். 1980இல் இருந்து நடித்துவரும் தபுவுக்கு 46 வயது ஆகிறது. ஆனால் இதுவரை திருமணம் செய்து கொள்ள வில்லை.

அதற்கான காரணத்தை ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். “நான் இப்போது திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகத்தான் இருக்கிறேன். இப்படி இருப்பதால் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். திருமணம் செய்து கொண்டு வாழ்வது சிறப்பானதா? தனியாக இருப்பது நல்லதா? என்று கேட்கிறார்கள்.

எனக்கு ஒரு பகுதி மட்டுமே தெரியும். அதாவது திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது. இன்னொரு பகுதி தெரியாது.


அதனால் இந்தக் கேள்விக்கு எப்படி என்னால் பதில் சொல்ல முடியும். எனக்கு அந்த அனுபவம் இருந்தால் திருமணம் சிறந்ததா? திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்வது சிறந்ததா? என்பதைச் சொல்லியிருப்பேன்” என்றார்.

மேலும் தனக்கு திருமணம் ஆகாததற்குக் காரணம் நடிகர் அஜய் தேவ்கன் தான் என கூறி இருக்கிறார் “நானும், அவரும் 25 ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருக்கிறோம். அஜய் தேவ்கன் எனது ஒன்றுவிட்ட சகோதரர் சமீர் ஆர்யாவின் நண்பர். எனது வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்தே அஜய் தேவ்கன் என்னுடன் ஒன்றாக இருந்தார்.

என்னுடன் இருந்த தருணங்களை அவர் உணர்வார். அவரால்தான் நான் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறேன். அதனால் எனக்கு வருத்தம் இல்லை” என அவர் தெரிவித்திருக்கிறார். நடிகர் அஜய் தேவ்கன் 1999ஆம் ஆண்டு இந்தி நடிகை கஜோலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!