பிரபல நடிகரிடம் மன்னிப்புக் கேட்க மறுக்கும் கவர்ச்சி நடிகையால் மீண்டும் பரபரப்பு..!!


தமிழில் ‘நான் ஈ’ படத்தில் நடித்து பிரபலமானவர் நானி. வெப்பம், ஆஹா கல்யாணம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் மீது நடிகை ஸ்ரீரெட்டி செக்ஸ் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். “நானி ஒரு பெண் வாழ்க்கையை சீரழித்து நரகத்தில் தள்ளிவிட்டார். நிறைய பெண்கள் அவரிடம் ஏமாந்துள்ளனர். எனக்கும் பாலியல் தொல்லை கொடுத்தார். நானியின் சர்ச்சை படங்களை விரைவில் வெளியிடுவேன். அதை காண தயாராக இருங்கள்” என்று கூறினார்.

நானி சம்பந்தமான ஆபாச வீடியோ ஸ்ரீரெட்டியிடம் இருக்கலாம் என்றும் அதை வைத்தே இந்த மிரட்டலை விடுத்து இருக்கிறார் என்றும் தெலுங்கு பட உலகினர் பேசினர். இந்த குற்றச்சாட்டுகள் நானிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


அவர் ஸ்ரீரெட்டிக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பினார். “என்மீது தவறான குற்றச்சாட்டுகள் கூறிய ஸ்ரீரெட்டி ஒரு வாரத்துக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்மீது மான நஷ்ட வழக்கு தொடர்வேன் என்று நோட்டீசில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் ஒரு வாரம் தாண்டியும் ஸ்ரீரெட்டி வருத்தம் தெரிவிக்க மறுத்து விட்டார்.

இதனால் அவர் மீது வழக்கு தொடர்வது குறித்து வக்கீல்களுடன் நானி ஆலோசனை நடத்துகிறார். டைரக்டர்கள் சேகர் கம்முலு, தயாரிப்பாளர் கோனா வெங்கட், நடிகர் ராணாவின் தம்பி அபிராம், நடிகர் ராஜசேகர் ஆகியோர் மீதும் ஸ்ரீரெட்டி பாலியல் புகார் கூறியிருந்தார். தற்போது தெலுங்கு பட உலகினர் ஸ்ரீரெட்டிக்கு நடிக்க வாய்ப்பு தராமல் ஒதுக்குகின்றனர். இதனால் தனக்கு பணகஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீரெட்டி கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!