செம போத ஆகாதே – சினிமா விமர்சனம்


இளம் நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து திரையில் ஓடிக்கொண்டிருக்கும் படம்தான் செம போத ஆகாதே. இந்த திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் டிரைலர் இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது. அதனால் இந்த திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில், அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள படம் செம போத ஆகாதே. இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக மிஸ்டி, அனைக்கா சொட்டி நடிக்க, கருணாகரன்,ஜான் விஜய் ஆகியோர் முக்கிய காதாபத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில், கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய. கிக்காஸ் என்டர்டெயின்மெண்ட் இந்த படத்தை தயாரித்துள்ளது. பிரவீன் கே எல் எடுட்டிங் செய்யபடத்தின் வசனங்களை ராதாகிருஷ்ணன் எழுதியுள்ளார்.

கதை சுருக்கம்


ரமேஷ் என்ற கதாபத்திரத்தில் அதர்வா நடித்துள்ளார். ரமேஷுக்கும் அவரது காதலிக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. சில முக்கிய காரணங்களுக்காக அவர்களது திருமணம் நிறுத்தப்படுகிறது. இதனால் மனம் உடைந்து போகும் ரமேஷ் அதிகமாக குடிக்கிறார். மேலும் திருமணம் நின்றுபோன சோகம் அவரை அதிகமாக பாதிக்கிறது. அதிக குடிபோதையில், தனது காதலியை மறக்க ஒரு விபரீத முடிவை எடுக்கிறார்.

முக்கிய திருப்பம்

தனது நண்பனுக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, தனது சோகம் தீர ஏதேனும் செய்ய வேண்டும் என்கிறார். உடனேஅவர் ஒரு விலை மாதுவை அனுப்பி வைக்கிறார்.விலை மாதுவாக அனைக்கா சொட்டி நடித்திருக்கிறார். விலை மாதுவுக்கும் ரமேஷுக்கும் நடக்கும் உரையடலுக்கு திரையரங்கில் விசில் பறக்கிறது. மேலும் படத்தில் இரண்டைஅர்த்தம் கொண்ட வசனங்கள் அதிகமாக இருக்கிறது.


திடீரென்று விலை மாது சிலரால் கொல்லப்படுகிறார். அதற்கும் ரமேஷ்தான் காராணம் என்று எல்லோரும் நினைக்கின்றனர். ரமேஷ் உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்தாரா ? எதற்காக விலை மாது கொல்லப்பட்டார் என்பது மீதிக் கதை .திரைப்படத்தில்அதர்வாவின் நண்பராக கருணாகரன் நடித்துள்ளார். அதர்வாவுக்கு அவரது நண்பருக்குமான உரையாடல்களை இளைஞர்கள் ரசிக்கின்றனர்.

எட்டுமொத்த பார்வை !

மேலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படத்திற்குசென்றால் கண்டிப்பாக இந்த படம் நன்றாக இருக்கும். ஜாலியாக ஒரு திரைப்படம் பார்த்த அனுபவமும் அத்துடன் விறுவிறுப்பையும் இணைந்து தந்திருக்கிறார் இயக்குநர். யுவன் சங்கர் ராஜா இசைக்காகவே படத்தை எத்தனை முறைவேண்டுமானாலும் பார்க்கலாம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!